أَعِندَهُۥ عِلۡمُ ٱلۡغَيۡبِ فَهُوَ يَرَىٰٓ

அவனிடம் மறைவானவை பற்றிய அறிவு இருந்து, அவன் பார்க்கிறானா?


أَمۡ لَمۡ يُنَبَّأۡ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ

அல்லது, மூஸாவின் ஸுஹுஃபில் - வேதத்தில் இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?


وَإِبۡرَٰهِيمَ ٱلَّذِي وَفَّىٰٓ

(அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்றாஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)


أَلَّا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰ

(அதாவது:) சுமக்கிறவன் பிறிதொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான்,


وَأَن لَّيۡسَ لِلۡإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ

இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.


وَأَنَّ سَعۡيَهُۥ سَوۡفَ يُرَىٰ

அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.


ثُمَّ يُجۡزَىٰهُ ٱلۡجَزَآءَ ٱلۡأَوۡفَىٰ

பின்னர், அதற்கு நிறப்பமான கூலியாக, அவன் கூலி வழங்கப்படுவான்.


وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلۡمُنتَهَىٰ

மேலும் உம் இறைவனில் பால்தான் இறுதி (மீளுதல்) இருக்கிறது.


وَأَنَّهُۥ هُوَ أَضۡحَكَ وَأَبۡكَىٰ

அன்றியும், நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான், அழச் செய்கிறான்.



الصفحة التالية
Icon