أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ

"அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?" என்றும் கூறினர்.)


قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ

(நபியே!) நீர் கூறும்: "(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.


لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ

"குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.


ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ

அதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,


لَأٓكِلُونَ مِن شَجَرٖ مِّن زَقُّومٖ

ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.


فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ

ஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.


فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ

அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.


فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ

"பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்."


هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ

இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.



الصفحة التالية
Icon