ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ

அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?


نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةٗ وَمَتَٰعٗا لِّلۡمُقۡوِينَ

நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம்.


فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ

ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.


۞فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ

நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.


وَإِنَّهُۥ لَقَسَمٞ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ

நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும்.


إِنَّهُۥ لَقُرۡءَانٞ كَرِيمٞ

நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.


فِي كِتَٰبٖ مَّكۡنُونٖ

பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.


لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ

தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.


تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ

அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.



الصفحة التالية
Icon