فَرَوۡحٞ وَرَيۡحَانٞ وَجَنَّتُ نَعِيمٖ

அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.


وَأَمَّآ إِن كَانَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ

அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,


فَسَلَٰمٞ لَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ

"வலப்புறத்தோரே! உங்களுக்கு "ஸலாம்" உண்டாவதாக" (என்று கூறப்படும்).


وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ

ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்


فَنُزُلٞ مِّنۡ حَمِيمٖ

கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.


وَتَصۡلِيَةُ جَحِيمٍ

நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).


إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلۡيَقِينِ

நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.


فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ

எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.



الصفحة التالية
Icon