تَدۡعُواْ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ

(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.


وَجَمَعَ فَأَوۡعَىٰٓ

அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)


۞إِنَّ ٱلۡإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا

நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.


إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعٗا

அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,


وَإِذَا مَسَّهُ ٱلۡخَيۡرُ مَنُوعًا

ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.


إِلَّا ٱلۡمُصَلِّينَ

தொழுகையாளிகளைத் தவிர-


ٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَآئِمُونَ

(அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.


وَٱلَّذِينَ فِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ مَّعۡلُومٞ

அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.


لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ

யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).



الصفحة التالية
Icon