ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَ

பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?


ثُمَّ نَظَرَ

பிறகும் (குர்ஆனின் வசனங்களை) அவன் நோட்டமிட்டான்.


ثُمَّ عَبَسَ وَبَسَرَ

பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான், இன்னும் (முகஞ்) சுளித்தான்.


ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ

அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான்.


فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ يُؤۡثَرُ

அப்பால் அவன் கூறினான்: "இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.


إِنۡ هَٰذَآ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ

"இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை" (என்றும் கூறினான்.)


سَأُصۡلِيهِ سَقَرَ

அவனை நான் "ஸகர்" (என்னும்) நரகில் புகச் செய்வேன்.


وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ

"ஸகர்" என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?


لَا تُبۡقِي وَلَا تَذَرُ

அது (எவரையும்) மிச்சம் வைக்காது, விட்டு விடவும் செய்யாது.


لَوَّاحَةٞ لِّلۡبَشَرِ

(அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும்.



الصفحة التالية
Icon