عَنِ ٱلۡمُجۡرِمِينَ

குற்றவாளிகளைக் குறித்து-


مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ

"உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.)


قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ

அவர்கள் (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.


وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ

"அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.


وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلۡخَآئِضِينَ

"(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.


وَكُنَّا نُكَذِّبُ بِيَوۡمِ ٱلدِّينِ

"இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.


حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلۡيَقِينُ

"உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்).


فَمَا تَنفَعُهُمۡ شَفَٰعَةُ ٱلشَّـٰفِعِينَ

ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.


فَمَا لَهُمۡ عَنِ ٱلتَّذۡكِرَةِ مُعۡرِضِينَ

நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?



الصفحة التالية
Icon