وَقِيلَ مَنۡۜ رَاقٖ

"மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது.


وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ

ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.


وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ

இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.


إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ

உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.


فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை.


وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ

ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.


ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰٓ

பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.


أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ

கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!


ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ

பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.


أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَن يُتۡرَكَ سُدًى

வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?



الصفحة التالية
Icon