ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ

மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.


لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ

(அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.


إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ

நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.


كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ

நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.


وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.


هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ

இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.


وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ

அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.


وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.


هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ

இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).



الصفحة التالية
Icon