فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا

"ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).


إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا

நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.


حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا

தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.


وَكَوَاعِبَ أَتۡرَابٗا

ஒரே வயதுள்ள கன்னிகளும்.


وَكَأۡسٗا دِهَاقٗا

பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).


لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّـٰبٗا

அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.


جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا

(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.


رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا

(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.



الصفحة التالية
Icon