أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ

"மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"


قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ

"அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.


فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ

ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-


فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ

அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.


هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ

(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?


إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى

'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,


ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ

"நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."


فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ

இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும்.


وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ

"அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).



الصفحة التالية
Icon