وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا

அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.


وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ

இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.


أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا

அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.


وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا

அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.


مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ

உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).


فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ

எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,


يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ

அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.


وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ

அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.


فَأَمَّا مَن طَغَىٰ

எனவே, எவன் வரம்பை மீறினானோ -



الصفحة التالية
Icon