وَفَٰكِهَةٗ وَأَبّٗا

பழங்களையும், தீவனங்களையும்-


مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ

(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,


فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ

ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -


يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -


وَأُمِّهِۦ وَأَبِيهِ

தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;


وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ

தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-


لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ

அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.


وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ

அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.


ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ

சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.


وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ

ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.



الصفحة التالية
Icon