وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ

நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.


كِرَامٗا كَٰتِبِينَ

(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.


يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ

நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.


إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ

நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.


وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ

இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.


يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ

நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.


وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ

மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.


وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ

நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?


ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ

பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?


يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ

அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.



الصفحة التالية
Icon