وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا

இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.


وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ

ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-


فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا

அவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக-


وَيَصۡلَىٰ سَعِيرًا

அவன் நரகத்தில் புகுவான்.


إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا

நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.


إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ

நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான்.


بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا

அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.


فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ

இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.


وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ

மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,



الصفحة التالية
Icon