وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ

அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.


فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ

ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.


وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ

(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.


فَكُّ رَقَبَةٍ

(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-


أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ

அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.


يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ

உறவினனான ஓர் அநாதைக்கோ,


أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ

அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).


ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ

பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.


أُوْلَـٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ

அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.



الصفحة التالية
Icon