وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ

ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.


إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ

நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.


وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ

அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.


فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ

ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.


لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى

மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.


ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ

எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.


وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى

ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.


ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ

(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.


وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ

மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.



الصفحة التالية
Icon