أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ

நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,


أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ

அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,


أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ

அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,


أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ

நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?


كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ

அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.


نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ

தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,


فَلۡيَدۡعُ نَادِيَهُۥ

ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.


سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ

நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.


كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩

(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.



الصفحة التالية
Icon