وَٱجۡعَل لِّي وَزِيرٗا مِّنۡ أَهۡلِي

"என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக!


هَٰرُونَ أَخِي

"என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)!


ٱشۡدُدۡ بِهِۦٓ أَزۡرِي

"அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக!


وَأَشۡرِكۡهُ فِيٓ أَمۡرِي

"என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக!


كَيۡ نُسَبِّحَكَ كَثِيرٗا

"நாங்கள் உன்னை அதிகமதிகம் (தஸ்பீஹு செய்து) துதிப்பதற்காகவும்,


وَنَذۡكُرَكَ كَثِيرًا

"உன்னை அதிகமதிகம் நினைவு கூர்வதற்காகவும் (இவற்றையெல்லாம் அருள்வாயாக!)


إِنَّكَ كُنتَ بِنَا بَصِيرٗا

"நிச்சயமாக, நீ எங்களை நோக்கியவனாகவே இருக்கிறாய்" (என்றார்)


قَالَ قَدۡ أُوتِيتَ سُؤۡلَكَ يَٰمُوسَىٰ

"மூஸாவே! நீர் கேட்டவை, நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன" என்று (அல்லாஹ்) கூறினான்.


وَلَقَدۡ مَنَنَّا عَلَيۡكَ مَرَّةً أُخۡرَىٰٓ

மேலும், முன்னர் மற்றொரு முறையும் நிச்சயமாக நாம் உம்மீது பேரருள் புரிந்துள்ளோம்.



الصفحة التالية
Icon