فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

"அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?" (என்று கேட்டார்.)


فَنَظَرَ نَظۡرَةٗ فِي ٱلنُّجُومِ

பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.


فَقَالَ إِنِّي سَقِيمٞ

"நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன்" என்றும் கூறினார்.


فَتَوَلَّوۡاْ عَنۡهُ مُدۡبِرِينَ

எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.


فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ

அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று "(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?" என்று கூறினார்.


مَا لَكُمۡ لَا تَنطِقُونَ

"உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை?" (என்றும் கேட்டார்.)


فَرَاغَ عَلَيۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡيَمِينِ

பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி தம் வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.


فَأَقۡبَلُوٓاْ إِلَيۡهِ يَزِفُّونَ

(அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.



الصفحة التالية
Icon