لَوۡ أَنَّ عِندَنَا ذِكۡرٗا مِّنَ ٱلۡأَوَّلِينَ

"முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள் பெற்றிருந்தால் -


لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ

"அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்" என்று.


فَكَفَرُواْ بِهِۦۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ

ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!


وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِينَ

தூதர்களாகிய நம் அடியார்களிடம், முன்னரே திடமாக நம்வாக்குச் சென்றிருக்கிறது.


إِنَّهُمۡ لَهُمُ ٱلۡمَنصُورُونَ

(அதாவது) நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள் -


وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَٰلِبُونَ

மேலும், நம் படைகளே நிச்சயமாக அவர்களே வெற்றி பெறுவார்கள்.


فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ

(ஆகவே, நபியே!) சிறிது காலம் வரையில் நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக!


وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ

(அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப்போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.



الصفحة التالية
Icon