ٱلرَّحۡمَٰنُ

அளவற்ற அருளாளன்,


عَلَّمَ ٱلۡقُرۡءَانَ

இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.


خَلَقَ ٱلۡإِنسَٰنَ

அவனே மனிதனைப் படைத்தான்.


عَلَّمَهُ ٱلۡبَيَانَ

அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.


ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانٖ

சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.


وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ

(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.


وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ

மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.


أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ

நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.


وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ

ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.



الصفحة التالية
Icon