وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ

அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.


ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ

அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.


وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ

ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.


أَلَا يَظُنُّ أُوْلَـٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ

நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?


لِيَوۡمٍ عَظِيمٖ

மகத்தான ஒரு நாளுக்காக,


يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-


كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ

ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது


وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ

'ஸிஜ்ஜீன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?


كِتَٰبٞ مَّرۡقُومٞ

அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.



الصفحة التالية
Icon