وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ

கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,


وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ

இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,


وَشَاهِدٖ وَمَشۡهُودٖ

மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,


قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ

(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.


ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ

விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).


إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ

அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,


وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ

முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.


وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ

(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.


ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ

வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.



الصفحة التالية
Icon