وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ

வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக


وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ

தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?


ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ

அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.


إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ

ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.


فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.


خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ

குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.


يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ

முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.


إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ

இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.


يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ

இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.


فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ

மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.



الصفحة التالية
Icon