وَٱلۡفَجۡرِ

விடியற் காலையின் மீது சத்தியமாக,


وَلَيَالٍ عَشۡرٖ

பத்து இரவுகளின் மீது சத்தியமாக,


وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ

இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,


وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ

செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,


هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ

இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?


أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?


إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ

(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,


ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ

அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.


وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ

பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)


وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ

மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)



الصفحة التالية
Icon