قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ

(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.


مِن شَرِّ مَا خَلَقَ

அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-


وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-


وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ

இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,


وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).



الصفحة التالية
Icon