---
title: "ترجمة سورة الرحمن - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/55/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/55/book/27819"
surah_id: "55"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة الرحمن - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/55/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الرحمن - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/55/book/27819*.

Translation of Surah الرحمن from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 55:1

> الرَّحْمَٰنُ [55:1]

நிகழக்கூடிய மறுமை நிகழ்ந்து விட்டால்,

### الآية 55:2

> ﻿عَلَّمَ الْقُرْآنَ [55:2]

அவன், குர்ஆனை கற்பித்தான்;

### الآية 55:3

> ﻿خَلَقَ الْإِنْسَانَ [55:3]

மனிதனைப் படைத்தான்;

### الآية 55:4

> ﻿عَلَّمَهُ الْبَيَانَ [55:4]

அவனுக்கு தெளிவான விளக்கங்களை கற்பித்தான்.

### الآية 55:5

> ﻿الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ [55:5]

சூரியனும் சந்திரனும் (அல்லாஹ் நிர்ணயித்த ஒரு தவணைக்காக அவை ஒவ்வொன்றுக்கும் உள்ள நிலைகளை நோக்கி அல்லாஹ்விடம் முடிவு செய்யப்பட்ட) ஒரு கணக்கின் படி ஓடுகின்றன.

### الآية 55:6

> ﻿وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ [55:6]

(தண்டுகள் இல்லாத) செடிகொடிகளும் மரங்களும் (அல்லாஹ்விற்கு) சிரம் பணிகின்றன.

### الآية 55:7

> ﻿وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ [55:7]

வானத்தை - அதை (பூமிக்கு மேல்) உயர்த்தினான். தராசை -நீதத்தை (பின்பற்றப்பட வேண்டிய கட்டாய சட்டமாக) அமைத்தான்.

### الآية 55:8

> ﻿أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ [55:8]

தராசில் நீங்கள் எல்லை மீறாதீர்கள். (அநியாயம் செய்யாதீர்கள்!)

### الآية 55:9

> ﻿وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ [55:9]

நிறுவையை (தராசின் நாக்கை சரியாக நடுவில்) நீதமாக நிறுத்துங்கள்! தராசில் (பொருள்களை குறைத்து) நஷ்டப்படுத்தாதீர்கள்.

### الآية 55:10

> ﻿وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ [55:10]

பூமி - அதை படைப்பினங்களுக்காக (-அவை வாழ்வதற்காக) அவன் அமைத்தான்.

### الآية 55:11

> ﻿فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ [55:11]

அதில் பழங்களும் குலைகளுடைய பேரீச்ச மரங்களும் இருக்கின்றன.

### الآية 55:12

> ﻿وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ [55:12]

வைக்கோல் உடைய தானியங்களும் (மற்ற) உணவுகளும் அதில் இருக்கின்றன.

### الآية 55:13

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:13]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:14

> ﻿خَلَقَ الْإِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ [55:14]

சுட்ட களிமண்ணைப் போல் உள்ள சுடாத காய்ந்த களிமண்ணிலிருந்து மனிதனை படைத்தான்.

### الآية 55:15

> ﻿وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ [55:15]

நெருப்பின் (சிவப்பும் மஞ்சளும் கலந்த) நடு ஜுவாலையில் இருந்து ஜின்களைப் படைத்தான்.

### الآية 55:16

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:16]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:17

> ﻿رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ [55:17]

இரு கிழக்கு திசைகள், இன்னும் இரு மேற்கு திசைகளின் இறைவன் அவன்.

### الآية 55:18

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:18]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:19

> ﻿مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ [55:19]

(வானம், இன்னும் பூமியின்) இரு கடல்களும் சந்திப்பதற்கு அவன் விட்டுவிட்டான்.

### الآية 55:20

> ﻿بَيْنَهُمَا بَرْزَخٌ لَا يَبْغِيَانِ [55:20]

அவை இரண்டுக்கும் இடையில் தடை இருக்கிறது. அவை இரண்டும் எல்லையைக் கடக்காது.

### الآية 55:21

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:21]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:22

> ﻿يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ [55:22]

அவை இரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் உற்பத்தியாகின்றன.

### الآية 55:23

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:23]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:24

> ﻿وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ [55:24]

மலைகளைப் போல் கடலில் (பாய் மரத்துணிகள்) விரிக்கப்பட்ட கப்பல்கள் அவனுக்கே உரியன. (அவன்தான் அவற்றை மிதக்கவும் பயணிக்கவும் வைத்தான்.)

### الآية 55:25

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:25]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:26

> ﻿كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ [55:26]

அதன் மீது இருக்கின்ற எல்லோரும் அழிபவர்கள்தான்.

### الآية 55:27

> ﻿وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ [55:27]

பெரும் கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் உரியவனான உமது இறைவனின் முகம்தான் நிலையாக நீடித்து இருக்கும்.

### الآية 55:28

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:28]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:29

> ﻿يَسْأَلُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ [55:29]

வானங்களில், பூமியில் உள்ளவர்கள் (எல்லாம்) அவனிடமே (தங்கள் தேவைகளைக் கேட்டு) யாசிக்கின்றன. ஒவ்வொரு நாளும் அவன் ஒரு காரியத்தில் இருக்கின்றான்.

### الآية 55:30

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:30]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:31

> ﻿سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ الثَّقَلَانِ [55:31]

மனித, ஜின் வர்க்கத்தினரே உங்களுக்காக (-உங்களை விசாரித்து கூலி கொடுப்பதற்காக) நாம் ஒதுங்குவோம்.

### الآية 55:32

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:32]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:33

> ﻿يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ إِنِ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا ۚ لَا تَنْفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ [55:33]

ஜின் இன்னும் மனித சமூகத்தவர்களே! (அல்லாஹ்வின் தண்டனைகளில் இருந்து தப்பிக்க) வானங்கள், இன்னும் பூமியின் கோடிகளில் நீங்கள் விரண்டு ஓட உங்களால் முடிந்தால் ஓடுங்கள்! (அல்லாஹ்வின்) அதிகாரத்தை கொண்டே தவிர நீங்கள் ஓட முடியாது.

### الآية 55:34

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:34]

(ஜின் இன்னும் மனித வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:35

> ﻿يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِنْ نَارٍ وَنُحَاسٌ فَلَا تَنْتَصِرَانِ [55:35]

நெருப்பின் ஜுவாலையும் உருக்கப்பட்ட செம்பும் உங்கள் இருவர் மீதும் அனுப்பப்படும். நீங்கள் (என்னிடம்) பழிதீர்க்க முடியாது.

### الآية 55:36

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:36]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:37

> ﻿فَإِذَا انْشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ [55:37]

வானம் பிளந்து விட்டால் அது காய்ந்த எண்ணையைப் போல் ரோஜா நிறத்தில் ஆகிவிடும்.

### الآية 55:38

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:38]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:39

> ﻿فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنْبِهِ إِنْسٌ وَلَا جَانٌّ [55:39]

அந்நாளில் மனிதர்களோ ஜின்களோ தத்தமது குற்றங்களைப் பற்றி விசாரிக்கப்பட மாட்டார்கள். (நல்லவர் யார், தீயவர் யார் என்று விசாரித்து தான் அறிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.)

### الآية 55:40

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:40]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:41

> ﻿يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ [55:41]

குற்றவாளிகள் அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறியப்பட்டு விடுவார்கள். உச்சிமுடிகளையும் பாதங்களையும் பிடிக்கப்படும்.

### الآية 55:42

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:42]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:43

> ﻿هَٰذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ [55:43]

இதுதான் அந்த குற்றவாளிகள் பொய்ப்பிக்கின்ற நரகமாகும்.

### الآية 55:44

> ﻿يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ [55:44]

அ(ந்த நரக நெருப்பி)ற்கு மத்தியிலும் கடுமையாக கொதிக்கின்ற சுடு நீருக்கு மத்தியிலும் அவர்கள் சுற்றி வருவார்கள்.

### الآية 55:45

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:45]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:46

> ﻿وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ [55:46]

தன் இறைவனுக்கு முன் தான் நிற்பதை பயந்தவருக்கு இரண்டு சொர்க்கங்கள் உண்டு.

### الآية 55:47

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:47]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:48

> ﻿ذَوَاتَا أَفْنَانٍ [55:48]

(அந்த இரண்டு சொர்க்கங்களும்) பல நிறங்களுடையவையாகும். (பல வகையான இன்பங்களுடையவையாகும்)

### الآية 55:49

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:49]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:50

> ﻿فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ [55:50]

அவை இரண்டிலும் இரண்டு ஊற்றுகள் ஓடும்.

### الآية 55:51

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:51]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:52

> ﻿فِيهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ [55:52]

அவை இரண்டிலும் எல்லா பழங்களிலும் (பசுமையானதும் உலர்ந்ததும் ஆகிய) இரண்டு வகைகள் உண்டு.

### الآية 55:53

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:53]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:54

> ﻿مُتَّكِئِينَ عَلَىٰ فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ [55:54]

விரிப்புகளில் சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். அவற்றின் உள்பக்கங்கள் மொத்தமான பட்டினால் ஆனதாக இருக்கும். இரண்டு சொர்க்கங்களின் கனிகளும் (உண்ண விரும்புபவர்களுக்கு மிக) நெருக்கமாக இருக்கும்.

### الآية 55:55

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:55]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:56

> ﻿فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ [55:56]

அவற்றில் (அந்த விரிப்புகளில் கணவனைத் தவிர மற்ற ஆண்களை விட்டும்) பார்வைகளை தாழ்த்திய பெண்கள் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு ஜின்னும் அவர்களை தொட்டு இருக்க மாட்டார்கள்.

### الآية 55:57

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:57]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:58

> ﻿كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ [55:58]

அவர்கள் மாணிக்கத்தைப் போலும் பவளத்தைப் போலும் இருப்பார்கள்.

### الآية 55:59

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:59]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:60

> ﻿هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ [55:60]

(உலகில் அல்லாஹ்வை பயந்தவர் செய்த) நன்மைக்கு கூலி (மறுமையில் அல்லாஹ் அவருக்கு கொடுக்கின்ற சொர்க்கம் என்ற) நன்மையைத் தவிர வேறு உண்டா?

### الآية 55:61

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:61]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:62

> ﻿وَمِنْ دُونِهِمَا جَنَّتَانِ [55:62]

அந்த இரண்டையும் விட தகுதியால் குறைந்த (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உண்டு.

### الآية 55:63

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:63]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:64

> ﻿مُدْهَامَّتَانِ [55:64]

(அவற்றில் மிக அடர்த்தியான பச்சை பசுமையான மரங்கள் இருப்பதால்) அவை இரண்டும் (தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு) கருமையாக இருக்கும்.

### الآية 55:65

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:65]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:66

> ﻿فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ [55:66]

அவை இரண்டிலும் பொங்கி எழக்கூடிய இரு ஊற்றுகள் இருக்கும்.

### الآية 55:67

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:67]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:68

> ﻿فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ [55:68]

அவை இரண்டிலும் (பல வகை) பழங்களும் பேரித்த மரங்களும் மாதுளை மரங்களும் இருக்கும்.

### الآية 55:69

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:69]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:70

> ﻿فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ [55:70]

அவற்றில் (குணத்தால்) சிறந்த பெண்கள், (முகத்தால்) பேரழகிகள் இருப்பார்கள்.

### الآية 55:71

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:71]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:72

> ﻿حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ [55:72]

(அந்த பெண்கள்) வெள்ளைநிற அழகிகள், (அவர்களுக்குரிய) இல்லங்களில் (அவர்களின் கணவன்மார்களுக்காக மட்டும் அவர்கள்) ஒதுக்கப்பட்டவர்கள். (கணவனைத் தவிர வேறு யாரையும் அவர்கள் நாட மாட்டார்கள்.)

### الآية 55:73

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:73]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:74

> ﻿لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ [55:74]

இவர்களுக்கு முன்னர் எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு ஜின்னும் அவர்களைத் தொட்டு இருக்க மாட்டார்கள்.

### الآية 55:75

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:75]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:76

> ﻿مُتَّكِئِينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ [55:76]

(சொர்க்க வாசிகள்) பச்சை நிற தலையணைகளின் மீதும், மிக அழகான (மிக நேர்த்தியான) விரிப்புகளின் மீதும் சாய்தவர்களாக இருப்பார்கள்.

### الآية 55:77

> ﻿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ [55:77]

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?

### الآية 55:78

> ﻿تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ [55:78]

கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் உரியவனாகிய உமது இறைவனின் பெயர் மிக அருள் நிறைந்தது.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/55.md)
- [كل تفاسير سورة الرحمن
](https://quranpedia.net/surah-tafsir/55.md)
- [ترجمات سورة الرحمن
](https://quranpedia.net/translations/55.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/55/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
