لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ

(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.


وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ

இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -


وَلَحۡمِ طَيۡرٖ مِّمَّا يَشۡتَهُونَ

விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).


وَحُورٌ عِينٞ

(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.


كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ

மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).


جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ

(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.


لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا تَأۡثِيمًا

அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.


إِلَّا قِيلٗا سَلَٰمٗا سَلَٰمٗا

'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).


وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ

இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)



الصفحة التالية
Icon