ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ

முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,


وَثُلَّةٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ

பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).


وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ

இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)


فِي سَمُومٖ وَحَمِيمٖ

(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -


وَظِلّٖ مِّن يَحۡمُومٖ

அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.


لَّا بَارِدٖ وَلَا كَرِيمٍ

(அங்கு) குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை.


إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ

நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.


وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ

ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.


وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ

மேலும், அவர்கள், "நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.



الصفحة التالية
Icon