وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ

இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-


وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمٗا

(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.


يُبَصَّرُونَهُمۡۚ يَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِي مِنۡ عَذَابِ يَوۡمِئِذِۭ بِبَنِيهِ

அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-


وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ

தன் மனைவியையும், தன் சகோதரனையும்-


وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ

அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-


وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ يُنجِيهِ

இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).


كَلَّآۖ إِنَّهَا لَظَىٰ

அவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.


نَزَّاعَةٗ لِّلشَّوَىٰ

அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.



الصفحة التالية
Icon