ذَرۡنِي وَمَنۡ خَلَقۡتُ وَحِيدٗا

என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.


وَجَعَلۡتُ لَهُۥ مَالٗا مَّمۡدُودٗا

இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.


وَبَنِينَ شُهُودٗا

அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).


وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِيدٗا

இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன்.


ثُمَّ يَطۡمَعُ أَنۡ أَزِيدَ

பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.


كَلَّآۖ إِنَّهُۥ كَانَ لِأٓيَٰتِنَا عَنِيدٗا

அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.


سَأُرۡهِقُهُۥ صَعُودًا

விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன்.


إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ

நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான்.


فَقُتِلَ كَيۡفَ قَدَّرَ

அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?



الصفحة التالية
Icon