كَلَّا وَٱلۡقَمَرِ

(ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.


وَٱلَّيۡلِ إِذۡ أَدۡبَرَ

இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.


وَٱلصُّبۡحِ إِذَآ أَسۡفَرَ

விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,


إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ

நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.


نَذِيرٗا لِّلۡبَشَرِ

(அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது-


لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَتَقَدَّمَ أَوۡ يَتَأَخَّرَ

உங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது).


كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ

ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.


إِلَّآ أَصۡحَٰبَ ٱلۡيَمِينِ

வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர


فِي جَنَّـٰتٖ يَتَسَآءَلُونَ

(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-



الصفحة التالية
Icon