فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ

எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.


ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ

பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.


كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ

எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.


وَتَذَرُونَ ٱلۡأٓخِرَةَ

ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.


وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاضِرَةٌ

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.


إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٞ

தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.


وَوُجُوهٞ يَوۡمَئِذِۭ بَاسِرَةٞ

ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.


تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةٞ

இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.


كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ

அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,



الصفحة التالية
Icon