وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ

மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-


لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ

எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?


لِيَوۡمِ ٱلۡفَصۡلِ

தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.


وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ

மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?


وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.


أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ

முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?


ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ

பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.


كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ

குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).


وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.


أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ

அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?



الصفحة التالية
Icon