فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ

பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.


إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ

ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை.


فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ

இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.


وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.


أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا

பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?


أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا

உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).


وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا

அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.


وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.


ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

"நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).



الصفحة التالية
Icon