وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا

மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.


وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا

உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.


وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا

ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.


وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا

அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.


لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا

அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.


وَجَنَّـٰتٍ أَلۡفَافًا

(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).


إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا

நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.


يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا

ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.


وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا

இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.



الصفحة التالية
Icon