كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ

அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.


فَمَن شَآءَ ذَكَرَهُۥ

எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.


فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ

(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.


مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ

உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.


بِأَيۡدِي سَفَرَةٖ

(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-


كِرَامِۭ بَرَرَةٖ

(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.


قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ

(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!


مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ

எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)


مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ

(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.


ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ

பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.



الصفحة التالية
Icon