ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ

பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.


ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ

பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.


كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ

(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.


فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ

எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.


أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا

நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.


ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا

பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-


فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا

பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.


وَعِنَبٗا وَقَضۡبٗا

திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-


وَزَيۡتُونٗا وَنَخۡلٗا

ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -


وَحَدَآئِقَ غُلۡبٗا

அடர்ந்த தோட்டங்களையும்,



الصفحة التالية
Icon