فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ

ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.


سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ

(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.


وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى

ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.


ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ

அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.


ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ

பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.


قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ

தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.


وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ

மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.


بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا

எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.


وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ

ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.



الصفحة التالية
Icon