سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ

எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.


إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ

அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.


فَإِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ

ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும்.


مَآ أَنتُمۡ عَلَيۡهِ بِفَٰتِنِينَ

(எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது.


إِلَّا مَنۡ هُوَ صَالِ ٱلۡجَحِيمِ

நரகைச் சென்றடைபவர்களைத் தவிர.


وَمَامِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٞ مَّعۡلُومٞ

(மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்;) "குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை."


وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّآفُّونَ

"நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்).


وَإِنَّا لَنَحۡنُ ٱلۡمُسَبِّحُونَ

"மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்."


وَإِن كَانُواْ لَيَقُولُونَ

(நபியே! மக்காவாசிகள் முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்;



الصفحة التالية
Icon