سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٖ وَاقِعٖ

(நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.


لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٞ

காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.


مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ

(அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).


تَعۡرُجُ ٱلۡمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٖ

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.


فَٱصۡبِرۡ صَبۡرٗا جَمِيلًا

எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.


إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدٗا

நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.


وَنَرَىٰهُ قَرِيبٗا

ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.


يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ

வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-



الصفحة التالية
Icon