يَـٰٓأَيُّهَا ٱلۡمُدَّثِّرُ

(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!


قُمۡ فَأَنذِرۡ

நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.


وَرَبَّكَ فَكَبِّرۡ

மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.


وَثِيَابَكَ فَطَهِّرۡ

உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.


وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ

அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.


وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ

(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிமாகப் பொறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர்.


وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ

இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.


فَإِذَا نُقِرَ فِي ٱلنَّاقُورِ

மேலும், எக்காளத்தில் ஊதப்படும்போது-


فَذَٰلِكَ يَوۡمَئِذٖ يَوۡمٌ عَسِيرٌ

அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.


عَلَى ٱلۡكَٰفِرِينَ غَيۡرُ يَسِيرٖ

காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல.



الصفحة التالية
Icon