عَمَّ يَتَسَآءَلُونَ

எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?


عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ

மகத்தான அச்செய்தியைப் பற்றி,


ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ

எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,


كَلَّا سَيَعۡلَمُونَ

அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.


ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ

பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.


أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا

நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?


وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا

இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?


وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا

இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.


وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا

மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.


وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا

அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.



الصفحة التالية
Icon