عَبَسَ وَتَوَلَّىٰٓ

அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.


أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ

அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,


وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ

(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?


أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ

அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.


أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ

(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-


فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ

நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.


وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ

ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.


وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ

ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,


وَهُوَ يَخۡشَىٰ

அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-


فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ

அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.



الصفحة التالية
Icon