إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது


وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ

நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-


وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ

மலைகள் பெயர்க்கப்படும் போது-


وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ

சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-


وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ

காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-


وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ

கடல்கள் தீ மூட்டப்படும்போது-


وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ

உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-


وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-


بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ

"எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-


وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ

பட்டோலைகள் விரிக்கப்படும் போது-



الصفحة التالية
Icon