إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ

வானம் பிளந்துவிடும் போது


وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ

தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது-


وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ

இன்னும், பூமி விரிக்கப்பட்டு,


وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ

அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-


وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ

தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.


يَـٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ

மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.


فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ

ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,


فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا

அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.



الصفحة التالية
Icon