سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى

(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.


ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ

அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.


وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ

மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.


وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ

அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.


فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ

பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.


سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ

(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-


إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ

அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.


وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ

அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.



الصفحة التالية
Icon