هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ

சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?


وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ

அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.


عَامِلَةٞ نَّاصِبَةٞ

அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.


تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ

கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.


تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ

கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.


لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ

அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.


لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ

அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.


وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ

அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.


لِّسَعۡيِهَا رَاضِيَةٞ

தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.



الصفحة التالية
Icon