لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ

இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.


وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ

நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,


وَوَالِدٖ وَمَا وَلَدَ

பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,


لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ

திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.


أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ

'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?


يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا

"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.


أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ

தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?


أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ

அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?


وَلِسَانٗا وَشَفَتَيۡنِ

மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?



الصفحة التالية
Icon